அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ.. லயம் ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி நி சா கா சா நி பா மா மா பா நி பா மா கா சா சா கா மா கா மா பா மா பா நி பா பா மா கா சா நி பா நி நி சா கா மா கா சாநி கா சா நி பா சா நி பா மா
உயிர் பிறந்திடும் முன்னே ஒளியும் பிறந்தது அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு ஹஹ மனிதா
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
நி சா கா சா நி நி சா சா சா நி சா கா சா நி நி சா சா சா நி சா நி சா கா கா சா கா சா கா மா மா கா மா கா மா பா நி பா பா பா
மொழியும் இசையும் அடங்காது முதலும் முடிவும் அதற்கேது சுதியில் விலகி லயத்தில் நழுவி உலகில் எதுவும் கிடையாது
பா நி சா கா சா நி பா நி சா கா சா நி பா நி சா கா சா நி சா சா சா நி சா கா மா கா சா நி சா கா மா கா சா நி சா கா மா கா சா சா சா அலை அடிப்பதும் மழை அடிப்பதும் அவன் அவன் சொல்லி ஒயாது இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில் இசை லயம் ஒன்றும் மாறாது
கா கா பா பா மா மா நி நி பா பா சா சா நி நி கா கா
ஓசை இன்றி நாதம் இல்லை நாதம் இன்றி ஏதும் இலை கேள்வி இன்றி ஞானம் இல்லை கீதம் இன்றி நானும் இல்லை
ஆஆஆஆ…ஆஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா இசை ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ.. லயம் ஒன்றே ..ஆஆஆ…ஆஆஆ..ஆஆஆ..
யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ பாதமோ ஆடை காலின் அணிகலோ கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளைவு வானவில் நிறங்களே காதலா நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே என் காதலே என்னாளும் உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே
ஹேய்… கண்ணாடியே…என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்… ஹேய் என் வானொலியே…என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்… ஹேய்… என் நிழற்துணையே…முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா… ஹே ஹேய் ஹேய் உயிர்க்கதவே…திறக்கும் போதே ஆயிரம் வாசம் வீசுமா… ஆ ஆ… தோழி தோழி…என்னருந்தோழி சொல்லடி… நீதானா என்னுள்ளே வீழ்வது…தீரா தூறல்களாய்… நீதானா என்னுள்ளே மூழ்வது…தூங்காத தீப்பூக்களாய்… கவிதைகள் சுவைத்திடும் துணையாய்…நீயானாய் நீயானாய்… புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்… என் செய்வேன் சொல்லடி…சொல்லடி சொல்லடி சொல்லடி… தோழி தோழி சொல்லடி…தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஓஹோ… காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே… உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது… வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே… நீயே வெண்பனியே…தீயின் சுவையும் நீயே… உன்னை மெது மெதுவாக…பயணங்கள் போல தொடங்கிடவா… மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக… தவறுகள் இனி சரி என மாற…தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… மனம் ஒரு கொதிகலன் ஆக…தவறுகள் இனி சரி என மாற… தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… உன் காதின் ஓரம் நான்…வரைவேன் காதல் கவிதை… துடுப்பாக மாறுவேன்…உன் கரையை தாண்டுவேன்… அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ…ஓ… உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ… ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே… உன் இடையில் ஊர்வலம் செல்ல…என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே… காதல் என் கவியே…நீ என் அருகில் வந்தாலே… உலகம் ஏன் இருளுது…பகல் இரவாய் மாறுது… வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…
கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை… மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை…தொலைந்தேன் தனியே யாருமில்லை… நீ நிஜம்தானா…இல்லை நிழல்தானா… பதில் கேட்கிறேன் கிடைக்காதா…நம் ஞாபகங்கள்… அதை நினைத்திருப்பேன்…எனைத் தேடியே திரும்பாதா… ஆ… ஆ… காதல் நீ…காயம் நீ… நீ… கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ… பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே… காதல் நீ…காயம் நீ… நீ… கானல் நீயே மறைந்தாயே…வேஷம் நீ… பொய்கள் நீயே…மாற்றம் நீ… நான் உடைந்தேனே… கனவே நீ நான்… கனவே நீ நான் விழிக்கவில்லை…கலைவாய் என்றே நினைக்கவில்லை…
மழையோடு நனையும் புது பாடல்… நீதான் அழகான திமிரே அடியே அடியே… காற்றோடு பரவும் உன் வாசம்… தினமும் புது போதை தானே சிலையே அழகே அழகே… நான் உனக்கெனவே முதல் பிறந்தேன்… இளங்கொடியே நீ எனக்கெனவே கரம் விரித்தாய் என் வரமே… மந்தார பூப்போல…மச்சம் காணும் வேல… என்னத்த நான் சொல்ல…மிச்சம் ஒன்னும் இல்ல… முழு மதியினில் பனி இரவினில்…கனி பொழுதினில் ஓடாதே… முகம் காட்டு நீ முழு வெண்பனி…ஓடாதே நீ ஏன் எல்லையே… இதழோரமாய் சிறு புன்னகை…நீ காட்டடி என் முல்லையே… நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே… நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே… உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை… தண்ணீர் கமலம் தானா…முகம் காட்டு நீ முழு வெண்பனி… ஓடாதே நீ ஏன் எல்லையே…இதழோரமாய் சிறு புன்னகை… நீ காட்டடி என் முல்லையே…
வானவில் தேடியே…ஒரு மின்னலை அடைந்தேன்… காட்சியின் மாயத்தில்…என் கண்களை இழந்தேன்… என் நிழலும் எனையே உதறும்…நீ நகரும் வழியில் தொடரும்… ஒரு முடிவே அமையா…கவிதை உடையும்… உன் ஞாபகம் தீயிட…விறகாயிரம் வாங்கினேன்… அறியாமலே நான் அதில்…அரியாசனம் செய்கிறேன்… இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும்கரையும் வளரும்… உன் நினைவும் அது போல்…மனதை குடையும்… இலை உதிரும் மீண்டும் துளிரும்…வெண்ணிலவும் கரையும் வளரும்… உன் நினைவும் அது போல்…மனதை குடையும்…
அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சொல்லு இது நடந்திட கூடுமா இரு துருவங்கள் சேருமா உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக என்ன செய்வேனோ ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண் தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே வா வந்து என்னை சேர்ந்திடு என் தோள்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும்
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன் வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன் உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன் உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன் பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா வாழ்க்கை ஓர் வட்டம்போல் முடிந்த இடத்தில் தொடங்காதா சிறுமை கண்டு தவித்தேன் என் சிறகில் ஒன்றை முறித்தேன் ஒற்றை சிறகில் ஊன பறவை எத்தனை தூரம் பறப்பேன் அன்பே உன்னை அழைத்தேன் உன் அகிம்சை இம்சை பொறுத்தேன் சீதை குளித்த நெருப்பில் என்னை குளிக்க சொன்னால் குளிப்பேன் அழுத நீரில் கறைகள் போய் விடும் தெரியாதா…குறைகள் உள்ளது மனித உறவுகள் புரியாதா இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா இது கண்ணீர் நடத்தும் பேச்சு வார்த்தை உடைந்த மனங்கள் ஒட்டாதா
உள்ளமே உள்ளமே…உள்ளே உன்னை காண வந்தேனே… உண்டாகிறாய் துண்டாகிறாய்…உன்னால் காயம் கொண்டேனே… காயத்தை நேசிக்கிறேன்…என்ன சொல்ல நானும் இனி… நான் கனவிலும் வசித்தேனே…என்னுடைய உலகம் தனி… சந்தோஷமும் சோகமும்…சேர்ந்து வந்து தாக்க கண்டேனே… சந்தேகமாய் என்னையே…நானும் பார்த்து கொண்டேனே… ஜாமத்தில் விழிக்கிறேன்…ஜன்னல் வழி தூங்கும் நிலா… ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்…கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா
சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்… மலா்களில் மலா்வாய்… பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்…நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்… சத்தமின்றி துயில்வாய்… ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி…சேவைகள் செய்ய வேண்டும்… நீ அழும்போது நான் அழ நோ்ந்தால்…துடைக்கின்ற விரல் வேண்டும்… சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்…சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்… நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்…காதில் கூந்தல் நுழைப்பேன்… உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்…நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்… உப்பு மூட்டை சுமப்பேன்… உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்… வெளிவரும்போதுபோது விடுதலை செய்து…வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…
மடி மீது நீ இருந்தால்…சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ… நொடி நேரம் பிரிந்தாலும்…காலங்களும் நின்று போகாதோ… ஒரு மூச்சில் இரு தேகம்…வாழ்வது நாம் அன்றி வேராரோ… நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும்… என் நெஞ்சம் தாகம் கொல்லுதே… ஓஹோ கண்ணோடும் நெஞ்சோடும்…உயிரால் உன்னை மூடி கொண்டேனே… கனவோடும் நினைவோடும்…நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே… மதி பறிக்கும் மதி முகமே…உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்… எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே… மனசெல்லாம் நீதான் நீதானே… ஓஹோ…
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…இன்று வசப்படவில்லையடி… வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…ஒரு உருண்டையும் உருலுதடி… காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…ஒரு நிமிஷமும் வருஷமடி… கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…ஒரு கலக்கமும் தோன்றுதடி… இது சொர்க்கமா நரகமா…சொல்லடி உள்ளபடி… நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…உன் வார்த்தையில் உள்ளதடி… கோகிலமே நீ குரல் கொடுத்தால்…உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்… கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்… வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்… வருடவரும் பூங்காற்றையெல்லாம்… கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்… என் காதலின் தேவையை…காதுக்குள் ஓதிவைப்பேன்… உன் காலடி எழுதிய கோலங்கள்…புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும் ஆயிரம் காலத்துபயிரா காலம் தான் பதில் சொல்லும் ஒரு மாலை நேரத்து மயக்கமா உன்னை நான் இழந்தேன் இருளில் தெரியும் வெளிச்சமாய் உன்னுள்ளே நான் இருப்பேன் நானே உன்னைதத்தெடுப்பேன் நீ மீண்டும் வர காத்திருப்பேன் என் மேல் சாய தோள் கொடுப்பேன் உன் தோழன் போலே நான் இருப்பேன் தேயாதே என் நிலவே சாயாதே என் மலரே உன் கண்ணில் நீர் வழிந்தால் என் மனம் காயப்படும் ஆயிரம் காலத்து பயிரா காலம் தான் பதில் சொல்லும்
வலியே என் உயிர் வலியே…நீ உலவுகிறாய் என் விழி வழியே… சகியே என் இளம் சகியே…உன் நினைவுகளால் நீ துரத்துறியே… மதியே என் முழு மதியே…பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே… நதியே என் இளம் நதியே…உன் அலைகளினால் நீ உரசிறியே… யாரோ மனதிலே…ஏனோ கனவிலே… நீயா உயிரிலே…தீயா தெரியலே… காற்று வந்து மூங்கில் என்னை…பாடச் சொல்கின்றதோ… மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…ஊமை ஆகின்றதோ… மனம் மனம் எங்கிலும்…ஏதோ கனம் கனம் ஆனதே… தினம் தினம் ஞாபகம் வந்து…ரணம் ரணம் தந்ததே… அலைகளின் ஓசையில்…கிளிஞ்சலாய் வாழ்கிறேன்… நீயா… முழுமையாய்… நானோ…வெறுமையாய்… நாமோ…இனி சேர்வோமா… மிக மிகக் கூர்மையாய்…என்னை ரசித்தது உன் கண்கள்தான்… மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…உன் வார்த்தை தான்… கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…வெந்நீர்… வெண்ணிலா…கண்ணீர்… கண்ணிலா… நானும் வெறும் கானலா… யாரோ…யாரோ…மனதிலே ஏனோ… ஏனோ…கனவிலே ஓ நீயா…ஓ நீயா…உயிரிலே தீயா…தீயா…தெரியலே…
கண்ணாளனே கண்ணாளனே….உன் கண்ணிலே என்னை கண்டேன் கண் மூடினால் கண் மூடினால்…அந்நேரமும் உன்னை கண்டேன் ஒரு விரல் என்னை தொடுகையில்…உயிர் நிறைகிறேன் அழகா மறு விரல் வந்து தொடுகையில்…விட்டு விலகுதல் அழகா உயிர் கொண்டு வாழும் நாள் வரை…இந்த உறவுகள் வேண்டும் மன்னவா இதே சுகம் இதே சுகம்…எந்நாளுமே கண்டால் என்ன இந்நேரமே இந்நேரமே….என் ஜீவனும் போனால் என்ன முத்தத்திலே பலவகை உண்டு….இன்று சொல்லட்டுமா கணக்கு இப்படியே என்னை கட்டி கொள்ளு….மெல்ல விடியட்டும் கிழக்கு அச்சம் பட வேண்டாம் பெண்மையே…எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
நிலா நிலா என் கூடவா . சலாம் சலாம் நான் போடவா சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே நிலவே நிலவே வெயில் கொண்டுவா மழையே மழையே குடை கொண்டுவா அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில் அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில் யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தான சுமை வைப்பது பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே
கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே… உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே… கண் விழித்துப் பார்த்தபோது…கலைந்த வண்ணமே… உன் கை ரேகை ஒன்று மட்டும்…நினைவுச் சின்னமே… கதறிக் கதறி எனது உள்ளம்…உடைந்து போனதே… இன்று சிதறிப் போன…சில்லில் எல்லாம் உனது பிம்பமே… கண்ணீரில் தீ வளர்த்து…காத்திருக்கிறேன்… உன் காலடித் தடத்தில்…நான் பூத்திருக்கிறேன்
கண்ணிர் துளிகளை…கண்கள் தாங்கும்… கண்மணி காதலின்…நெஞ்சம்தான் தாங்கிடுமா… கல்லறை மீதுதான்…பூத்த பூக்கள்… என்றுதான் வண்ணத்து…பூச்சிகள் பார்த்திடுமா… மின்சார கம்பிகள் மீது…மைனாக்கள் கூடுகட்டும்… நம் காதல் தடைகளை தாண்டும்… வளையாமல் நதிகள் இல்லை…வலிக்காமல் வாழ்க்கை இல்லை… வருங்காலம் காயம் ஆற்றும்… நிலவொளியை மட்டும் நம்பி…இலை எல்லாம் வாழ்வதில்லை… மின்மினியும் ஒளிகொடுக்கும்… தந்தையையும் தாயையும்…தாண்டி வந்தாய்… தோழியே இரண்டுமாய்…என்றுமே நான் இருப்பேன்… தோளிலே நீயுமே சாயும்போது…எதிர்வரும் துயரங்கள்… அனைத்தையும் நான் எதிா்ப்பேன்… வெந்நீரில் நீ குளிக்க…விறகாகி தீ குளிப்பேன்…உதிரத்தில் உன்னை கலப்பேன்… விழிமூடும் போதும் உன்னை…பிரியாமல் நான் இருப்பேன்…கனவுக்குள் காவல் இருப்பேன்… நான் என்றால் நானே இல்லை…நீதானே நானாய் ஆனேன்…நீ அழுதால் நான் துடிப்பேன்… உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் அன்பே அன்பே நீ என் பிள்ளை….தேகம் மட்டும் காதல் இல்லை கண்ணா என் கூந்தலில்…சூடும் பொன் பூக்களும்…உன்னை உன்னை அழைக்க கண்ணே உன் கைவளை…மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உடைக்க கண்களைத் திறந்து கொண்டு….நான் கனவுகள் காணுகிறேன் கண்களை மூடிக்கொண்டு…..நான் காட்சிகள் தேடுகிறேன் உன் பொன் விரல் தொடுகையிலே….நான் பூவாய் மாறுகிறேன் பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…..உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
நானே உன் சுமையாக ஏன் வந்தேன்..சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன் நான் உறங்கும் நாள் வேண்டும்….சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும் நான் உறங்கும் நாள் வேண்டும்…சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும்….சுகமாக அழ வேண்டும் இருள் மூடும் கடலோடு நானிங்கே…என் தோணி கரை சேரும் நாளெங்கே பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம் பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம் நிழலாக நீ வந்தாய் இது போதும் பேரின்பம்
நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான் காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான் ரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
பொன் மானை பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ விண்மீனை கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள் உன் கால்களில் பொன் மணி பாடும் ராகங்கள் நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம் நீயல்லவோ எந்தன் காதல் வரம் நீ மங்கையா ஆசையின் கங்கையா எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம் என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் நாதம் ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள் ஓர் பாவையில் வந்ததே அந்த எண்ணங்கள் உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன் உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன் என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்
ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய் நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய் உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன் இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும் ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய் நீ எங்கே சென்று சேர்ந்தாலும் உன் நிழல் வழியே வருவேன் தீயோடு என்னை எரித்தாலும் நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன் ஒருமுறை முகம் பார்க்க துடிக்குது உள்ளம் காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம் காதல் உறவை எரித்திடுமா இதுதான் காதல் சரித்திரமா உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன் இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்
உலகம் எனக்கென்றும் விளங்காதது…உறவே எனக்கின்று விலங்கானது… அடடா முந்தானை சிறையானது…இதுவே என் வாழ்வில் முறையானது… பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…உறவுக்கு உயிர் தந்தாயே… நானே எனக்கு நண்பன் இல்லையே…உன்னால் ஒரு சொந்தம் வந்ததே… என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே… உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு… என்னைத்தானே தஞ்சம் என்று…நம்பி வந்தாய் மானே…
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம் வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம் விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
எலி பந்தயத்தில் ( Rat race) என்னை விட யாராவது முன்னொக்கி செல்லும்போது நான் அமைதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ஒரு எலி அல்ல & நான் எந்த பந்தயத்திலும் இல்லை.
இங்கு நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உண்மை இல்லை அனைத்திற்கும் பின் நிலையான ஒன்று உள்ளது மற்ற அனைத்துமே மாறக்கூடியது
எல்லா பூக்களுக்கும் வாசம் இல்லை.
எல்லா நீரும் குடிக்கத்தக்க நீரும் இல்லை,
எல்லா மரத்தின் கனியும் சாப்பிட தகுந்தவையல்ல,
எல்லா இனிப்பும் விரும்பப்படுவது இல்லை
எல்லா ஆடைகளும் மறைப்பதில்லை
கண் முன்னாடி இருக்குற சக மனிதனிடத்தில் அன்பு கூற முடியாத ஒருவனால் காணாத கடவுளிடத்தில் அன்பு கூறவே முடியாது
நீங்கள் நிச்சயமாக பிறரால் நேசிக்கப்படுவீர்கள் ஆனால், என்றென்றும் அல்ல!
என்னதான் மனம்,குணம் ,அன்பு என்றாலும் கூட பொதுவாக புறத்தோற்றமும் அழகும் அதிக ஆதிக்கம் செய்யும் .
இங்கு இரண்டே பேர்தான் ஒன்று தன் சிரிப்பில் சந்தோஷம் காண்பவர் – மற்றொன்று மற்றவரின் சிரிப்பதில் சந்தோஷம் காண்பவர்
நீங்கள் யார் என்பதை உங்கள் பெயர் சொல்வதில்லை செயல் சொல்லும்
உங்களுக்குத் தெரிந்த மிகச் சிறந்த மற்றும் நெருங்கிய நபர்கள் உங்கள் மோசமான எதிரியாக மாறக்கூடும்.
உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் அதிகம் நம்பாதீர்கள் – நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களை காயப்படுத்தலாம் மற்றும் நீண்ட காலமாக உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.
மனிதர்கள் இயற்கையால் ஒட்டுண்ணித்தனமாக இருக்கிறார்கள், சிலர் அதை மறைக்க சிறந்த முகமூடிகளைக் கொண்டுள்ளனர்.
உங்கள் முகத்திற்கு எதிராக உண்மையாக இருப்பவரை விட முதுகுக்கு பின்பு உண்மையாக இருப்பவரே முக்கியமானவர்
சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்வீர்கள் என்றால் உங்கள் குணநலனில் ஒரு குறைபாடு இருக்கிறது என்று பொருள்
நீங்கள் தவறை உணர்ந்து கேட்டு கொண்ட மன்னிப்பை உங்களுக்கு தருகின்றேன்; ஆனால் உங்கள் மீது இழந்த நம்பிக்கை இழந்தது தான்
மனதிற்கு மிகவும் மோசமான காயம் துரோகம் தான்; ஏனென்றால், உங்களுடைய நம்பிக்கையை பெற்ற ஒருவர் தான் சுகமாக இருப்பதற்காக உங்களை காயப்படுத்த தயாராக இருக்கின்றார்.
நீங்கள் என்னை, வேண்டும் என்றால் சேர்த்து கொள்வீர்கள், இல்லை என்றால் விட்டு விடுவீர்கள் என்றால், என்னாலும் அதை செய்ய முடியும்
எல்லா தவறுகளையும் தம்மிடம் வைத்துக்கொண்டு உங்களை குற்றம் சுமத்தி, குற்ற உணர்வுக்கு ஆளாக்குபவர்களிடம் கவனம் தேவை
நீங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்து, உணர்ந்து தான் செய்கிறீர்கள் என்பது தான் சிலருக்கு வலிக்கின்றது.
மிகவும் அன்பு பாராட்டும் ஒருவர் நம் மனதை காயப்படுத்தினால், மௌனமாக இருப்பது நல்லது; ஏனெனில், உங்கள் அன்பே பயன்தராத போது வார்த்தைகள் என்ன பயனை தரக் கூடும்?
சில நேரங்களில் அவர்கள் சொல்லும் சாக்கு போக்குகளை கேட்க வேண்டியது இருக்காது; ஏனெனில் அவர்களுடைய செயல்களே உண்மை என்ன என்பதை காட்டி விடும்
உங்களை பத்தி எதுவுமே தெரியாத வரைக்கும் தான் மத்தவங்களுக்கு உங்கள் மேல ஆர்வம் இருக்கும்- சமூகத்தில் போலி மக்கள் அதிக மதிப்புடையவர்கள்.
நீங்கள் எவ்வளவு போலியாக நடிக்கிறீர்களோ, உங்களுக்கு அவ்வளவு அதிக நண்பர்கள் இருப்பார்கள்!
நீங்கள் பேசிய வார்த்தைகள் மீண்டும் திரும்பபெறமாட்டாது
அடுத்தவர்களிடம் நீங்கள் எதினும் எதிர்பார்த்தால் ; அது உங்கள் மனதை புண்படுத்த நீங்களே ஏற்படுத்தும் வழியாகும்
தனிமையில் இருப்பது தவறான உறவில் இருப்பதை விட ஆயிரம் மடங்கு மன அழுத்தத்தை மிச்சப்படுத்தும்
சில நேரங்களில் நாம் அதிகம் நம்பும் நபர்களே நம் நம்பிக்கையை அதிகம் உடைக்கிறார்கள்.பெரும்பாலான மக்கள் தேவை பொறுத்தே பிறரிடம் பழகுகிறார்கள்.நமக்கு தாக்கத்தை ஏற்படுத்திய எந்த நிகழ்வுகளும் எப்போதும் மனதில் இருந்து மறைவதில்லை.
என் செயல்பாடுகளில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்; வேறு யாரிடமும் அல்ல.
என்னை மதிக்காதவர்களிடமிருந்து நான் விலகிச் செல்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை என்பதே உண்மை.
————————————————————————————————————————–
“நீங்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல,
யாரும் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு நாள் நீங்கள் திடீரென்று இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் –
எனவே இப்போது கடவுளை அறிந்து கொள்ளுங்கள்.”
அகங்காரமும் பொறாமையும் இல்லாவிட்டால் அனைவரும் பேரின்பக் கடலில் மூழ்கி அழியாத அமிர்தத்தை அருந்தலாம். – மகாவதார் பாபாஜி
எல்லோரும் என்னை போன்றே இருப்பார்கள் என எண்ணிக் கொண்டுவிட்டேன். உலகில் வாழ்வோர் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ~ தஸ்தயேவ்ஸ்கி
உங்களை மதிப்பிடும் மக்களைப் பற்றி கவலை பட வேண்டாம்.
நீங்கள் வாழ்க்கையில் என்ன போராட்டங்களை அனுபவித்தீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
மக்கள் நீங்கள் அவர்களுக்காக செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசமாட்டார்கள் ஆனால் நீங்கள் அவர்களுக்கு எதிராக ஒரு சிறு தவறை செய்தால் கூட அது உங்களை தேவையற்ற மற்றும் சுயநலமான நபராக மாற்றும் அவர்கள் பார்வையில், மேலும் அவர்கள் அந்த தவறை உங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான முறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களை பற்றி பின்னால் பேசும் நபர்களுக்கு எதிராக உங்களை விட்டு கொடுக்கும் யாரும் உண்மையில் உங்கள் நண்பர் அல்ல.
தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள். நடத்தையால் யாரையும் நம்பாதீர்கள்.
நீங்கள் இதை சுயநலம் என்று அழைக்கலாம், ஆனால் நான் என்னை நல்லவனாக அல்லது சுயநலமாக நடத்துகிறேன், நான் பல பேரை நம்பி சோர்ந்து விட்டேன்.நான் யாருடைய இரண்டாவது விருப்பமாக இருக்க விரும்பவில்லை.
சில நேரங்களில் பணத்தை விட அன்பு மதிப்புக்குரியது.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்கள் சிறந்த நண்பர் ஒருநாள் உங்கள் மோசமான எதிரியாக மாறலாம்.நீங்கள் அவர்களுடன் பேசாமல் இருந்தால் நண்பர்கள் அந்நியர்களாக மாறிவிடுவார்கள்.
எந்தன் உயிரே எந்தன் உயிரே… கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே
எந்தன் வானில் காதல் நிலவே
காதலே காதலே
காற்றில் வரும் கீதமே
யமுனை ஆற்றிலே
யாருமில்லா தனியரங்கில்
நதியில் ஆடும் பூவனம்
கண்ணாலே காதல் கவிதை
கண்ணனை தேடி வந்த ராதையும் நானே
காற்றின் மொழி ஒலியா இசையா பெண்
காற்றின் மொழி ஒலியா இசையா ஆண்
என் ஆள பாக்க போறேன்
மெல்லினமே மெல்லினமே… நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
முதன் முதலில் பார்த்தேன்… காதல் வந்ததே
முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
ஓடை குயில் ஒரு பாட்டு
அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவி வர்மன் எங்கே
புதுமலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
வெள்ளை புறா ஒன்று
கலைவாணியே
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு
யார் வீட்டில் ரோஜா
தேன் சிந்துதே வானம்
சர சர சார காத்து
வராக நதிக்கரையோரம்
விழிகளின் அருகினில் வானம்
யே மாண்புரு மங்கையே
நான் மொழி அறிந்தேன்
இது ஒரு மாலை ராகம்.
இது ஒரு மகத்தான ராகம்,
இந்த ராகம் பக்தி, கம்பீரம், சிருங்கார, அமைதியான பல்வேறு ரசங்கள் அல்லது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது
இந்த ராகம் பொதுவாக காதல் கவிஞர்களால் ஏக்கம், பிரிவினை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த ராகத்தை மிக அழகான வண்ணத்துப்பூச்சியுடன் ஒப்பிடலாம்
இந்த ராகம் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு மற்றும் மூட்டுவலி, வாத நோய், தசை மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது என்று கூறப்படுகிறது
ராக யமன் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையின் மீது நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது மனித உடலின் அனைத்து ஆற்றல் மையங்களையும் தூண்டுகிறது,
இதன் விளைவாக கருப்பையில் குழந்தையின் சரியான வளர்ச்சி ஏற்படுகிறது.
இந்த ராகம் பருவம் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது .
இந்த பருவம் குளிர்காலத்திற்கு முந்தையது மற்றும் மிகவும் குளிராக இருக்காது.
இந்த காலகட்டத்தில் சூரியன் மந்தமானது மற்றும் மூடுபனி மற்றும் மூடுபனியால் மறைக்கப்படும். காற்று மெதுவாக வீசுகிறது, ஆறுகளில் குறைந்த நீர் மற்றும் குறைந்த ஓட்டம் உள்ளது
பக்தி (பக்தி) மற்றும் பவ (உணர்ச்சி) ஆகியவற்றுடன் கூடிய இந்த ராகத்தை மிக நெருக்கமாகக் கேட்பது/பாடுவது – எல்லா உலகக் கவனச்சிதறல்களும் இல்லாமல்- மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய கிருஷ்ணரை அவரது ஆடைகளுடன் நீங்கள் உணரும் பரவசத்தின் உச்சத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
மாசற்ற ஆடை அலங்காரம் மற்றும் அழகிய அழகு அவரது வசீகரமான உதடுகளில் மென்மையான புன்னகையுடன், தெய்வீக கருவியான பாசூரியை பிடித்து உங்கள் மனதை பளிச்சிடுகிறது
கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்று முனுமுனுக்கும் உலகத்தை நாம் மறந்து விடுகிறோம்.
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ , உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப் படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம் . எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்து விடும்.
2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
விசுவா மித்திரருக்கு அவரது தவ வலிமையே செல்வமாகும். அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவர் தவவலிமை குறைந்து விட்டதோ, அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.
3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
நம்மிடம் அளவுக்கு அதிக பணமோ பொருளோ நகையோ இருந்து, அதன் மீது அசையும் இருந்தால், பகைவரோ பங்காளியோ, கள்வரோ, அரசோ ( அரசு என்றால் வரியாக சொத்துக் குவிப்பாக) அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் வரும். அந்த எண்ணமே நமது தைரியத்தை பறித்துவிடும்.
4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் பறி போகும். நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம். ஆனால் சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி.
மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும். ஆனால் …
5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
1. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும். 2. கோபம் வந்தால் செல்வம் போய்விடும். 3. பேராசை வந்தால் தைரியம் போய்விடும். 4. கெட்டவர்கள் சகவாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும். 5. அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்துபோகும்.
இவை ஐந்தும் அற வழிக்குப் பொருந்தாவையாகும். ஆகவே இவை ஐந்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.
கௌரி (பார்வதி தேவி) இதயத்தைத் திருடுகிறாள் – (மனோஹரி என்றால் இதயத்தைத் திருடியவள் என்று பொருள்). எனவே கௌரிமனோஹரி என்றால் இதயத்தைத் திருடுகிற கௌரி. அர்த்தத்தின் மற்றொரு பதிப்பு ‘கௌரியைப் போல் இனிமையான மற்றும் அழகான ஒன்று’ (மனோஹரம்- மகிழ்ச்சிகரமானது)
You must be logged in to post a comment.